/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் பேருந்து மோதி ஒருவர் பலி
/
தனியார் பேருந்து மோதி ஒருவர் பலி
ADDED : பிப் 08, 2025 09:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஆரம்பாக்கம் பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து, ஆந்திரா நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, அவர் மீது மோதியது.
பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சவ கிடங்கில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், விபத்தில் இறந்தவர் யார், எந்த :ஊரைச் சேர்ந்தவர், எதற்காக இங்கே வந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.