sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கழிப்பறையில் பேராசிரியர் மர்ம சாவு

/

கழிப்பறையில் பேராசிரியர் மர்ம சாவு

கழிப்பறையில் பேராசிரியர் மர்ம சாவு

கழிப்பறையில் பேராசிரியர் மர்ம சாவு


ADDED : டிச 24, 2024 12:23 AM

Google News

ADDED : டிச 24, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகார் குமார் கார்வர், 32. இவர் மதுரவாயல் வக்கீல் தோட்டத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், நான்கு மாதங்களாக தங்கி, குன்றத்துாரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், உ.பி., யில் உள்ள இவரது மனைவி ஹகன்ஷா, நேற்று முன் தினம் இரவு பிரகார் குமார் கார்வரை மொபைல் போனில் தொடர்பு கொண்டார். ஆனால், நீண்ட நேரமாகியும் போன் எடுக்காததால் அவருடன் பணிபுரியும் சோனி என்பவருக்கு ஹகன்ஷா தகவல் தெரிவித்தார்.

மதுரவாயல் போலீசார் சென்ற போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் பின்பக்கம் உள்ள பால்கனி கதவு திறந்த நிலையில் இருந்தது.

அவ்வழியாக உள்ளே சென்று பார்த்த போது கழிப்பறையில், பிரகார் குமார் கார்வர் தலையில் பிளாஸ்டிக் கவர் மாட்டப்பட்ட நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதையடுத்து, போலீசார் அவரது உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.






      Dinamalar
      Follow us