sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீடு தீப்பிடித்து எரிந்ததில் பொருட்கள் சேதம்

/

வீடு தீப்பிடித்து எரிந்ததில் பொருட்கள் சேதம்

வீடு தீப்பிடித்து எரிந்ததில் பொருட்கள் சேதம்

வீடு தீப்பிடித்து எரிந்ததில் பொருட்கள் சேதம்


ADDED : பிப் 05, 2025 09:42 PM

Google News

ADDED : பிப் 05, 2025 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி நகராட்சி, எம்.ஜி.ஆர்., நகர் பெரியபாளையம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகேசன்,40. வெல்டர். இவர், தளம் போட்ட வீட்டில், மனைவி ராமி, பத்தாம் வகுப்பு படிக்கும் மகளுடன் வசித்து வருகிறார்.

நேற்று காலை, வழக்கம் போல முருகேசன் வேலை சென்றார். மாலை 5:00 மணிக்கு ராமி, வீட்டை பூட்டிக் கொண்டு, மகளை அழைத்து வருவதற்காக ஜெ.ஜெ.நகரில் உள்ள சி.எஸ்.ஐ., பள்ளிக்கு சென்றார்.

மாலை 5:20 மணிக்கு திடீரென மர்மமான முறையில் முருகேசன் வீட்டில் தீப்பிடித்து, புகை ஜன்னல் வழியாக வந்தது. இதை பார்த்ததும் அருகில் வசிப்பவர்கள் திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தும், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி வீட்டில் தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்து துணிமணிகள், பல்வேறு சான்றுகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகின.

திருத்தணி வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, முதற்கட்ட உதவிகள் செய்து கொடுத்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் எவ்வாறு தீப்பிடித்தது என விசாரித்து வருகின்றனர். வீட்டில் காஸ் சிலிண்டர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us