sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீடு புகுந்து 34 சவரன் திருடியவருக்கு 'காப்பு'

/

வீடு புகுந்து 34 சவரன் திருடியவருக்கு 'காப்பு'

வீடு புகுந்து 34 சவரன் திருடியவருக்கு 'காப்பு'

வீடு புகுந்து 34 சவரன் திருடியவருக்கு 'காப்பு'


ADDED : அக் 14, 2024 03:27 AM

Google News

ADDED : அக் 14, 2024 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டாபிராம்,::ஆவடி அடுத்த பட்டாபிராம், நெமிலிச்சேரி, தேவி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28. இவரது மனைவி லாவண்யா, 25. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

கடந்த ஜூன் 5 ம் தேதி, இருவரும் வேலைக்கு சென்ற பின், அவரது பெற்றோர், அருகில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றனர்.

அன்று இரவு, மணிகண்டன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 34 சவரன் நகை திருடு போனது தெரிந்தது.

இது குறித்து விசாரித்த பட்டாபிராம் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட சேலையூர் பதுவஞ்சேரி, நேசமணி தெருவைச் சேர்ந்த சகாயராஜ், 47, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 13 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us