ADDED : ஏப் 25, 2025 09:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:பாரிவாக்கம் கிராமத்தில் வரும் 30ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், பாரிவாக்கம் கிராமத்தில் கலெக்டர் தலைமையிலான மக்கள் தொடர்பு முகாம் வரும்30ம் தேதி காலை 10:00 மணியளவில் நடக்கிறது.
முகாமில், அனைத்து துறையைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கையை கலெக்டரிடம் மனு அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

