/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஒத்தி வைப்பு
/
மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஒத்தி வைப்பு
ADDED : ஜன 07, 2025 08:43 PM
திருவள்ளூர்:பெத்திக்குப்பம் கிராமத்தில், இன்று, அறிவிக்கப்பட்ட மக்கள் தொடர்பு முகாம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பெத்திக்குப்பம் கிராமத்தில், கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று, காலை 10:00 மணிக்கு நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நிர்வாக காரணத்திற்காக, வரும் 29ல் நடக்க உள்ளது. அப்போது, அனைத்து துறையைச சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.
பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கையினை கலெக்டரிடம் மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.