sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின்கம்பங்களை மாற்றி அமைப்பதில் இழுத்தடிக்கும் மின்வாரியம்

/

மின்கம்பங்களை மாற்றி அமைப்பதில் இழுத்தடிக்கும் மின்வாரியம்

மின்கம்பங்களை மாற்றி அமைப்பதில் இழுத்தடிக்கும் மின்வாரியம்

மின்கம்பங்களை மாற்றி அமைப்பதில் இழுத்தடிக்கும் மின்வாரியம்


ADDED : பிப் 20, 2024 10:33 PM

Google News

ADDED : பிப் 20, 2024 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த சிட்ரபாக்கம் பகுதி, ஆரணி ஆற்றின் கரையில் உள்ளது. மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, வெள்ள நீர் சிட்ரபாக்கம், கலைஞர் நகர், கொய்யாத்தோப்பு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மழைநீர் வடியும் வரை அவதிப்படுகின்றனர்.

இதை தடுக்க நபார்டு திட்டத்தின் மூலம் ஆரணி ஆற்றின் கரையில், சிட்ரபாக்கம் பகுதியில் ஒரு கி.மீட்டர் துாரத்திற்கு கரை அமைத்து, சாலை அகலப்படுத்தி தார்ச்சாலை அமைக்க, 3.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது. கடந்தாண்டு, ஏப்., மாதம் துவங்கிய பணியை செப்., மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.

துவக்கத்தில் ஜரூராக இருந்த பணிகள், தற்போது ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. கரைகள் அமைக்கும் பணிகள் முடிந்து, தற்போது சாலை விரிவாக்கப் பணி நடக்கிறது. சாலை விரிவாக்கத்தில் மின்கம்பங்களை மாற்றி அமைக்காமல் பணி நடக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணியில், மின்கம்பங்களை அகற்றாமல் பணிகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

3.13 கோடி ரூபாயில் திட்டம் துவங்கிய உடன் கடந்தாண்டு அக்., மாதம் ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு மின்கம்பங்கள் மாற்றி அமைக்க தீர்மானம் நிறைவேற்ற மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இதுவரை எவ்வித பணிகளையும் செய்யாமல் இழுத்தடிப்பு செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிட்ரபாக்கம் பகுதியில் ஆரணி ஆற்றின் கரையில் அமைக்கப்பட்ட மின்கம்பங்களை உடனடியாக மாற்றி அமைத்து, சாலைப் பணியை துவக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us