sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு

/

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு


ADDED : அக் 14, 2025 08:25 PM

Google News

ADDED : அக் 14, 2025 08:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மழைநீர் சேமிப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேமிப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீரின் தரம் குறித்து சோதனை மூலம் கண்டறியும் முறையை கலெக்டர் பிரதாப் பார்வையிட்டார்.

மேலும், பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.

பின், கலெக்டர் பிரதாப் கூறியதாவது:

தற்போது வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. அதற்கு முன், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் துார்வாரி ஆழப்படுத்துவது, குளம், குட்டை மற்றும் வரத்து கால்வாய்கள் துார்வாரும் பணி நடந்து வருகிறது.

அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் புதுப்பிக்கப்பட உள்ளன. குடிநீர் பரிசோதனை கருவிகள் ஆய்வகத்தில் உள்ளது. மழைக்கு முன், தண்ணீரின் மாசு கண்டறிய, தண்ணீரில் ராசாயனம் அளவு குறித்து ஆய்வு செய்து கண்காணிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us