/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ராமர் பஜனை கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
/
ராமர் பஜனை கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஏப் 06, 2025 11:35 PM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தில், மஹா கணபதி மற்றும் ராமர், சீதா லட்சுமணன் பஜனை கோவிலின் திருப்பணிகள் துவங்கி முடிக்கப்பட்டன. தொடர்ந்து. இக்கோவிலின் கும்பாபிஷேகம் கணபதி, நவகிரக ஹோமத்துடன் துவங்கியது.
இதற்காக. கோவில் வளாகதில் மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் அமைத்து மூன்று கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 7:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலம் நடந்தது. காலை 7:30 மணிக்கு மஹா கணபதிக்கு கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு மூலவர் ராமர், சீதா மற்றும் லட்சுமணனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மாலை கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.
இரவு 7:00 மணிக்கு உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர்.

