/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுமியிடம் அத்துமீறல் வாலிபருக்கு வலை
/
சிறுமியிடம் அத்துமீறல் வாலிபருக்கு வலை
ADDED : ஜன 07, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:ஆவடியைச் சேர்ந்த 41 வயது பெண்ணுக்கு 15 வயதில் மகள் உள்ளார். கருத்து வேறுபாடால் கணவனை பிரிந்த அப்பெண் 10ம் வகுப்பு படிக்கும் தன் மகளுடன் வசித்து வருகிறார்.
இவர்களது வீட்டின் மேல் தளத்தில் குடியிருக்கும் சுஜித், 38, என்பவர் கடந்த ஓராண்டாக சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துஉள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன், சுஜித் வீட்டை காலி செய்து பெங்களூருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் சிறுமி நடந்தவற்றை தாயிடம் கூறியுள்ளார். அவர் அளித்த புகாரின்படி, ஆவடி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து சுஜித் மற்றும் அவரது தந்தையை தேடி வருகின்றனர்.