/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முதியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்
/
முதியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்
ADDED : நவ 01, 2025 09:24 PM
திருவள்ளூர்: முதியோர் மற்றும் ஊனமுற்றோர் வீடுகளுக்கு, நாளை மற்றும் நாளை மறுநாள் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளன.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரரின் இல்லத்திற்கு, அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் செய்யும் பணியை, ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கி வருகின்றனர்.
நவம்பர் மாதத்திற்கான, ரேஷன் பொருட்கள், அவர்களின் வீடுகளுக்கு நாளை 3 மற்றும் 4ம் தேதியில், வினியோகிக்கப்பட உள்ளன. தகுதிவாய்ந்த குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

