ADDED : டிச 04, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
அம்பத்துார், காந்தி நகர், கல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிதாசன், 50. இவர், அண்ணா நகரில் உள்ள அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ரேஷன் கடை கிடங்கில் கணக்காளராக பணிபுரிந்தார்.
நேற்று காலை கிடங்கிற்கு 'பஜாஜ் பிளாட்டினா' பைக்கில் சென்றார். அப்போது, எதிர் திசையில் வந்த தனியார் தண்ணீர் லாரி, பாரதிதாசனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தப்பியோடிய திருநெல்வேலியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் இசக்கி பாண்டியன், 36 என்பவரை திருமங்கலம் போக்குவரத்து புலானய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.