sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பேருந்து நிறுத்தம் அருகில் ஆக்கிரமிப்பு கடை அகற்றம்

/

பேருந்து நிறுத்தம் அருகில் ஆக்கிரமிப்பு கடை அகற்றம்

பேருந்து நிறுத்தம் அருகில் ஆக்கிரமிப்பு கடை அகற்றம்

பேருந்து நிறுத்தம் அருகில் ஆக்கிரமிப்பு கடை அகற்றம்


ADDED : பிப் 14, 2025 02:37 AM

Google News

ADDED : பிப் 14, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி பகுதியில் இருந்து திருப்பதி, திருத்தணி, பெரியபாளையம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஜே.என்.சாலை வழியாக பயணம் செய்கின்றன. இதில், ஆயில் மில் பகுதி, அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், காமராஜர் சிலை மற்றும் சி.வி.நாயுடு சாலையில் கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால், அந்தச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது.

இதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் கடந்த சில வாரத்திற்கு முன் அகற்றினர்.

ஒரு வாரம் கடந்த நிலையில், தாலுகா அலுவலக பேருந்து நிறுத்தம் அருகில், புதிதாக காபி கடை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தது. இதனால், பயணியர் நிற்க இடமின்றி தவிப்பதுடன், தாலுகா அலுவலகத்திற்குள் வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.

இதுகுறித்து 'நம் நாளிதழில்' செய்தி வெளியானது. இதையடுத்து, நெடுஞ்சாலை துறை உத்தரவின்படி, காபி கடையும் அகற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us