sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி கோவில் மலைப்படிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

திருத்தணி கோவில் மலைப்படிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருத்தணி கோவில் மலைப்படிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருத்தணி கோவில் மலைப்படிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : டிச 29, 2024 01:38 AM

Google News

ADDED : டிச 29, 2024 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், வரும் 31ம் தேதி, படித் திருவிழாவும், ஜன.1ம் தேதி ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடக்கிறது. இவ்விழாவிற்கு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிப்பட்டு செல்வர்.

மேலும், ஆண்டிற்கு 365 நாட்கள் குறிக்கும் வகையில், முருகன் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் உள்ளதால், 31ம் தேதி, காலை 6:00 மணி முதல், நள்ளிரவு 12:00 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு படிக்கும், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி வழிபடுவர்.

இதுதவிர, நுாற்றுக்கணக்கான பஜனை குழுவினரும் படிகள் தோறும் முருகப் பெருமானின் பக்தி பாடல்கள் பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுவர்.

இந்நிலையில், மலைப்படிகள்யோரம் கடைகள் வைத்திருப்பவர்கள் படிகள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால், பக்தர்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.

ஆகையால், நேற்று, திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி தலைமையில், உதவி ஆணையர் விஜயகுமார், திருத்தணி வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார் மற்றும் வருவாய், கோவில் ஊழியர்கள் கோவிலுக்கு செல்லும் சன்னிதி தெரு, மலைப்படிகள் மற்றும் மலைக்கோவில் தேர்வீதியில் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால், கடைக்காரர்கள், கோவில் ஊழியர்களுடன் வாக்குவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us