/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீரமைக்கப்பட்ட கிளை நுாலகம் பயன்பாட்டிற்கு வராத அவலம்
/
சீரமைக்கப்பட்ட கிளை நுாலகம் பயன்பாட்டிற்கு வராத அவலம்
சீரமைக்கப்பட்ட கிளை நுாலகம் பயன்பாட்டிற்கு வராத அவலம்
சீரமைக்கப்பட்ட கிளை நுாலகம் பயன்பாட்டிற்கு வராத அவலம்
ADDED : நவ 10, 2024 02:10 AM

கடம்பத்துார்கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொண்டஞ்ரேி ஊராட்சி. இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கிளை நுாலகம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
போதிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்த இந்த கிளை நுாலகம் 2022- -23 ல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 1.18 லட்சம் ரூபாய் மதிப்பில் கிளை நுாலகம் ஊரக வளர்ச்சி நிதியின் கீழ் சீரமைக்கபட்ட்டது.
இந்த நுாலகம் சீரமைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் நுாலகர் மற்றும் புத்தகங்கள் இல்லாமல் பூட்டியே வீணாகி வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிளை நுாலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கொண்டஞ்சேரி நுாலக வாசகர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.