sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மகளிர் சுகாதார வளாகம் சீரமைத்தும் பயனில்லை

/

மகளிர் சுகாதார வளாகம் சீரமைத்தும் பயனில்லை

மகளிர் சுகாதார வளாகம் சீரமைத்தும் பயனில்லை

மகளிர் சுகாதார வளாகம் சீரமைத்தும் பயனில்லை


ADDED : ஜன 08, 2024 06:21 AM

Google News

ADDED : ஜன 08, 2024 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் நாபளூர் ஊராட்சி, குன்னத்துார் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, ஊராட்சி நிர்வாகம், கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன் மகளிர் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

ஆரம்பத்தில் பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த நிலையில், ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் சுகாதாரம் வளாகம் பழுதடைந்தது. இதையடுத்து மகளிர் பயன்படுத்தாமல் நான்கு ஆண்டுகளாக பூட்டியே கிடந்தது.

தொடர்ந்து, கடந்தாண்டு, 15 வது நிதிக்குழு மானியம், 2020- -21ம் ஆண்டு திட்டத்தின் கீழ், 2 லட்சத்து, 77 ஆயிரத்தி, 781 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஊராட்சி நிர்வாகம் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்தது. ஆனால், மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டிற்கு விடாமல் ஊராட்சி நிர்வாகம் பூட்டியேஉள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை திறந்து விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.






      Dinamalar
      Follow us