sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

/

ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை


ADDED : நவ 03, 2025 10:25 PM

Google News

ADDED : நவ 03, 2025 10:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே, கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக - ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அமைந்துள்ளது. இங்கு, 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.

ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் வழித்தடத்தில், போந்தவாக்கம், மாம்பாக்கம், வேளகாபுரம், பெரிஞ்சேரி, கச்சூர், சீத்தஞ்சேரி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

ஊத்துக்கோட்டையில் இருந்து சூளூர்பேட்டை, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இடங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் மட்டுமே, இந்த வழித்தடத்தில் இயக்கப் படுகின்றன.

திருவள்ளூர் அரசு பணிமனையில் இருந்து, ஒரேயொரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த பேருந்து சேவை போதுமானதாக இல்லை.

எனவே, ஊத்துக் கோட்டை அரசு பணிமனை யில் இருந்து, ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us