/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுரங்கப்பாதை சீரமைப்பு பணி விரைந்து முடிக்க கோரிக்கை
/
சுரங்கப்பாதை சீரமைப்பு பணி விரைந்து முடிக்க கோரிக்கை
சுரங்கப்பாதை சீரமைப்பு பணி விரைந்து முடிக்க கோரிக்கை
சுரங்கப்பாதை சீரமைப்பு பணி விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : டிச 17, 2025 06:38 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ரயில்வே சுரங்கப்பாதை சீரமைப்பு பணிகளுக்கான கால அவகாசம் முடிந்ததால், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே, நகர் பகுதியையும், சிப்காட் வளாகத்தையும் இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சென்று வந்தனர்.
நான்கு ஆண்டுகளாக சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவர்கள் மற்றும் அடி பகுதி வழியாக தண்ணீர் கசிவு ஏற்பட்டு, எப்போதும் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நின்றது. தண்ணீர் தேங்குவதால் சுரங்கப்பாதையின் சாலையில் ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டன.
பலவீனமாக உள்ள சுரங்கப்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, கடந்த மாதம் 10ம் தேதி மூடப்பட்டது. சுரங்கப்பாதை சீரமைப்பு பணிகளுக்காக, டிச., 9ம் தேதி வரை சுரங்கப்பாதை மூடப்படப்படும் என, ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வைக்கப்பட்டது.
இதனால், சுரங்கப்பாதை வழியாக சென்று வந்த வாகன ஓட்டிகள் அனைவரும், கன்னியம்மன் கோவில் ரயில் மேம்பாலம் வழியாக, 4 கி.மீ., சுற்றி சென் று வருகின்றனர்.
ஒரு மாத காலஅவகாசம் முடிந்த நிலையில், சீரமைப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், பொதுமக்களும், சுரங்கப்பாதை அமைந்துள்ள பழைய தபால் தெருவில் உள்ள வியாபாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

