/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி ஏரி பகுதியில் கழிப்பறை அமைக்க கோரிக்கை
/
பூண்டி ஏரி பகுதியில் கழிப்பறை அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 19, 2025 02:38 AM
ஊத்துக்கோட்டை, பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம், 1944ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி. மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் முக்கிய நீராதாரம்.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சமீபத்தில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஆயிரக்கணக்கான மக்கள் பூண்டியில் குவிந்தனர். இது போன்ற சமயங்களில் இங்கு கழிப்பறை வசதி இல்லாததால், பெண்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். எனவே, சுற்றுலா தலமாக உள்ள பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.