sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புட்லுார் ரயில் நிலையத்தில் 'லிப்ட்' அமைக்க வேண்டுகோள்

/

புட்லுார் ரயில் நிலையத்தில் 'லிப்ட்' அமைக்க வேண்டுகோள்

புட்லுார் ரயில் நிலையத்தில் 'லிப்ட்' அமைக்க வேண்டுகோள்

புட்லுார் ரயில் நிலையத்தில் 'லிப்ட்' அமைக்க வேண்டுகோள்


ADDED : ஜன 28, 2025 07:59 PM

Google News

ADDED : ஜன 28, 2025 07:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:புட்லுார் ரயில் நிலையத்தில், நடைமேம்பாலம் உயரமாக உள்ளதால், முதியோர், பெண்கள் வசதிக்காக, 'லிப்ட்' அமைக்க பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில், திருவள்ளூருக்கு முன்னதாக புட்லுார் ரயில் நிலையம் அமைந்துள்ளது. புட்லுார் ரயில் நிலையம் அருகில், அங்காள பரமேஸ்வரி கோவில், காக்களூர் தொழிற்பேட்டை உள்ளது. தினமும், இங்கிருந்து, 10,000க்கும் மேற்பட்டோர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

அதே போல, பல்வேறு இடங்களில் இருந்தும், கோவில், காக்களூர் தொழிற்பேட்டைக்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஐந்து மாதத்திற்கு முன், புட்லுாரில், நான்கு தண்டவாளங்களையும் கடக்கும் வகையில் நடைமேம்பாலம் நீட்டிக்கப்பட்டது.

இந்த நடைமேம்பாலம் உயரமாக இருப்பதால், வயதானோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள், கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, முதியோர் மற்றும் பெண்கள் வசதிக்காக, நடைமேடையின் இருபுறமும், 'லிப்ட்' வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, புட்லுார் ரயில் பயணியர் சங்கத்தினர், சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us