sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஸ்ரீபெரும்புதுாருக்கு பஸ் இயக்க கோரிக்கை

/

ஸ்ரீபெரும்புதுாருக்கு பஸ் இயக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதுாருக்கு பஸ் இயக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதுாருக்கு பஸ் இயக்க கோரிக்கை


ADDED : ஜன 26, 2025 02:08 AM

Google News

ADDED : ஜன 26, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதூருக்கு மாநகர பேருந்துகள் இயக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரயில்கள் வாயிலாக பல்வேறு ஊர்களில் இருந்து, திருவள்ளூருக்கு வருகின்றனர்.

அவர்கள், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மணவாள நகர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பேருந்து ஏறி செல்கின்றனர்.

இதனால், அலைச்சல், கால விரயம் ஏற்படுகிறது. தற்போது, திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதுாருக்கு ஏராளமான மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதில், சில பேருந்துகளை, காலை, மாலை நேரங்களில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுாருக்கு செல்லும் வகையில் இயக்க வேண்டும் என, மாநகர போக்குவரத்து கழகத்திற்கு பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us