sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உணவகம் அமைக்க கோரிக்கை

/

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உணவகம் அமைக்க கோரிக்கை

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உணவகம் அமைக்க கோரிக்கை

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உணவகம் அமைக்க கோரிக்கை


ADDED : ஜூலை 15, 2025 09:18 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 09:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உணவகம் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனை, ஜே.என்.சாலையில் இயங்கி வருகிறது.

இங்கு, தினமும் பல்வேறு சிகிச்சைக்காக, 3,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.

மேலும், 650 பேர் வரை, உள்நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகப்பேறு, குழந்தைகள் நல பிரிவுகளில், தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி, பிரசவம் மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், தினமும் 30 முதல் 40 அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன.

இதற்காக, நோயாளிகளுக்கு உதவியாக, அவரது உறவினர்களும் மருத்துவமனையில் தங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில், புதிய மருத்துவமனை வளாகம் கட்டும் பணிக்காக, கடந்த 6 ஆண்டுக்கு முன், அங்கிருந்த அம்மா உணவகம் இடித்து அகற்றப்பட்டது.

அதன் பின், இதுவரை மருத்துவமனை வளாகத்தில் உணவகம் எதுவும் இல்லை. இங்கிருந்த ஆவின் பாலகமும், கடந்தாண்டு முதல் செயல்படாமல் உள்ளது.

இதனால், நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் உணவருந்த, சாலையைக் கடந்து செல்ல வேண்டி உள்ளது.

வயதானோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் சாலையைக் கடக்கும் போது, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் அல்லது உணவகம் வசதியும், ஆவின் பாலகமும் திறக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us