sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 நீர்த்தேக்க தொட்டி சேதம்: இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

/

 நீர்த்தேக்க தொட்டி சேதம்: இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

 நீர்த்தேக்க தொட்டி சேதம்: இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

 நீர்த்தேக்க தொட்டி சேதம்: இடித்து அகற்ற எதிர்பார்ப்பு


ADDED : ஜன 04, 2026 05:02 AM

Google News

ADDED : ஜன 04, 2026 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: பள்ளி வளாகத்தில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவாலங்காடு ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒருங்கிணைந்த பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 30 ஆண்டுகளுக்கு முன்கட்டப்பட்டது.

இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நான்கு ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது.

இதன் நான்கு துாண்களும், கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, தொட்டியின் அடிபாகம் சேதமடைந்து, மோசமான நிலையில் உள்ளது.

பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியின் வெளிப்புறத்தில் இருந்து கான்கிரீட் பூச்சுகள் அவ்வப்போது உதிர்ந்து விழுவதால், குழந்தைகள் விளையாடும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர். இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற, திருவாலங்காடு ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us