/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சமுதாய கூடம் கட்டும் பணி மந்தம் மப்பேடு பகுதிவாசிகள் அதிருப்தி
/
சமுதாய கூடம் கட்டும் பணி மந்தம் மப்பேடு பகுதிவாசிகள் அதிருப்தி
சமுதாய கூடம் கட்டும் பணி மந்தம் மப்பேடு பகுதிவாசிகள் அதிருப்தி
சமுதாய கூடம் கட்டும் பணி மந்தம் மப்பேடு பகுதிவாசிகள் அதிருப்தி
ADDED : ஜன 24, 2024 12:38 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இப்பகுதியில், சமுதாயக்கூடம் இல்லாததால், தனியார் மண்டபங்களை அப்பகுதிவாசிகள் நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, திருவள்ளூர் அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கீடு, மற்றும் அரசு, தனியார் நிறுவனம் பங்களிப்புடன் 1.60 கோடி ரூபாய் மதிப்பில், சமுதாயக்கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மப்பேடு சிவன் கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு 2019ம் ஆண்டு பிப்ரவரியில் வட்டார வளர்ச்சி அலுவலர்களால், பூஜை போடப்பட்டது.
பின் மண் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் கால்நடை மருத்துவமனை அருகே மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2020ம் ஆண்டு பணிகள் துவங்கியது.
பணிகள் துவங்கி நான்காண்டுகளாகியும் தற்போது எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் புதர் மண்டி வீணாகி வருவது அப்பகுதிவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் மப்பேடு ஊராட்சியில், சமுதாயக்கூடம் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

