/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஞ்சரான சாலையால் பகுதிவாசிகள் அவதி
/
பஞ்சரான சாலையால் பகுதிவாசிகள் அவதி
ADDED : செப் 22, 2024 01:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருமழிசை அடுத்துள்ளது கூடப்பாக்கம் ஊராட்சி.
திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் இருந்து இந்த ஊராட்சிக்கு செல்லும் சாலையை இப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளதால் நேற்று முன்தினம் பெய்த சிறுமழைக்கே குளம் போல் மாறியுள்ளது.
பலமுறை ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாவட்ட கலெக்டர் ஊராட்சி பகுதியில் ஆய்வு செய்து பஞ்சரான ஒன்றிய சாலையை சீரமைக்க வேண்டுமென கூடப்பாக்கம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.