sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கன மழையால் சேதமடைந்த சோழவரம் ஏரிக்கரை சீரமைப்பு

/

கன மழையால் சேதமடைந்த சோழவரம் ஏரிக்கரை சீரமைப்பு

கன மழையால் சேதமடைந்த சோழவரம் ஏரிக்கரை சீரமைப்பு

கன மழையால் சேதமடைந்த சோழவரம் ஏரிக்கரை சீரமைப்பு


ADDED : ஜன 11, 2024 12:17 AM

Google News

ADDED : ஜன 11, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்:சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவை உடையது. வழக்கமாக மழைக்காலங்களில், 0.88 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, உபரிநீர் புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்படும்.

கடந்த மாதம், 'மிக்ஜாம்' புயல் மழையின் காரணமாக, இரண்டு நாட்கள் பெய்த கனமழையால், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், சோழவரம் ஏரி வேகமாக நிரம்பி, அதன் முழு கொள்ளளவை எட்டியது.

கடந்த மாதம் 7ம் தேதி ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

இதனால், கரைகள் ஆங்காங்கே சேதமடைந்தன. கான்கிரீட் கட்டுமானங்கள் உடைந்தன. ஏரியில் தேங்கிய தண்ணீர் கொசஸ்தலை ஆற்றிற்கு வெளியேற்றப்பட்டது.

படிப்படிப்பாக நீர் இருப்பு குறைக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, ஏரியில் 0.79 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போது சேதமடைந்த கரைகளை சீரமைக்கும் பணிகளில் நீர்வளத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கரையோரங்களில் உள்ள முட்செடிகள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் முழுமையாக அகற்றப்பட்டு வருகிறது.சரிவு பகுதிகளும் சமன்படுத்தப்படுகிறது.

கரைகளின் மேற்பகுதியில் இருந்த விரிசல்களில் மண் நிரப்பி சீரமைக்கப்பட்டு வருகிறது.

சேதமடைந்த பகுதிகள் முழுமையாக சீரமைக்கப்படும் என, அத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us