/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மருத்துவர்களை கண்டித்து திருவள்ளூரில் சாலை மறியல்
/
அரசு மருத்துவர்களை கண்டித்து திருவள்ளூரில் சாலை மறியல்
அரசு மருத்துவர்களை கண்டித்து திருவள்ளூரில் சாலை மறியல்
அரசு மருத்துவர்களை கண்டித்து திருவள்ளூரில் சாலை மறியல்
ADDED : ஜன 17, 2025 01:36 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, சேலை பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ், 55. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், நேற்று முன்தினம் காலை, மகள் திருமணத்திற்காக பத்திரிக்கை கொடுப்பதற்கு சென்னை சென்றவர் மாலையில் திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு அருகே, 'ஹீரோ ஸ்பிளன்டர்' இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த அவரை, '108' அவசரகால ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த தாமஸின் உறவினர்கள் மருத்துவமனைக்கு நேரில் வந்து காயமடைந்தது குறித்து விசாரித்துவிட்டு சென்றுள்ளனர்.
ஆனால், இரவு 7:30 மணி அளவில், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் விபத்தில் காயமடைந்தவரை மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்காததால், தாமஸ் இறந்ததாக கூறி, இரவு 8:30 மணியளவில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப் பேச்சு நடத்தியதையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.