/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் குப்பை எரிப்பு; வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
சாலையோரம் குப்பை எரிப்பு; வாகன ஓட்டிகள் கடும் அவதி
சாலையோரம் குப்பை எரிப்பு; வாகன ஓட்டிகள் கடும் அவதி
சாலையோரம் குப்பை எரிப்பு; வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜன 30, 2024 01:38 AM

கடம்பத்துார் : திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட புதுமாவிலங்கை ஊராட்சி.
இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலையோரம் சேகரமாகும் குப்பையை, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் எரித்து வருகின்றனர்.
ஊராட்சி பகுதியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் இருந்தும், இவ்வாறு, சாலையோரம் குப்பையை எரித்து வருவதால் ஏற்படும் புகையால், வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்றவைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
சில நேரங்களில், காற்றில் பறக்கும் தீக்கதிர்கள் வாகன ஓட்டிகளின் கண்களைப் பதம் பார்ப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பதை தடுக்க நடவடிக்கை வேண்டும் என பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.