sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.45 லட்சம் பறிமுதல்

/

ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.45 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.45 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.45 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 19, 2024 08:44 PM

Google News

ADDED : மார் 19, 2024 08:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்,:லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், அரக்கோணம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இரவு திருவள்ளூர் -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், புளியமங்கலத்தில் சுங்கச்சாவடி அமைத்து, செந்தில் குமார் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 45 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.

இந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், அரக்கோணம் தாசில்தார் செல்வியிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us