ADDED : ஏப் 07, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்,
கடம்பத்துார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் கடம்பத்துார், பிஞ்சிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, ராமன் கோவில் பகுதியில் உள்ள ஏகாத்தம்மன் கோவில் அருகே, கொசஸ்தலை ஆற்றிலிருந்து சரக்கு ஆட்டோவில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் இருவரும் ஆட்டோவை விட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்து, தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.