/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் கழிவுநீர் மப்பேடில் சுகாதார சீர்கேடு
/
நெடுஞ்சாலையில் கழிவுநீர் மப்பேடில் சுகாதார சீர்கேடு
நெடுஞ்சாலையில் கழிவுநீர் மப்பேடில் சுகாதார சீர்கேடு
நெடுஞ்சாலையில் கழிவுநீர் மப்பேடில் சுகாதார சீர்கேடு
ADDED : அக் 13, 2025 01:18 AM

மப்பேடு:மப்பேடு பகுதியில் நெடுஞ்சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் மற்றும் மலைபோல் மாட்டுச் சாணம் குவிந்து வருகிறது. இதனால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சி பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில், கழிவுநீர் கால்வாய் இல்லாததால், வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர், நெடுஞ்சாலையில் ஆறு போல வழிந்தோடுகிறது.
அதேபோல், நெடுஞ்சாலையோரம் மாட்டுச்சாணமும் மலைபோல் குவிந்து வருகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.