sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கழிவுநீர் குட்டையான தாமரை ஏரி சுகாதாரம், நிலத்தடி நீர் பாதிப்பு

/

கழிவுநீர் குட்டையான தாமரை ஏரி சுகாதாரம், நிலத்தடி நீர் பாதிப்பு

கழிவுநீர் குட்டையான தாமரை ஏரி சுகாதாரம், நிலத்தடி நீர் பாதிப்பு

கழிவுநீர் குட்டையான தாமரை ஏரி சுகாதாரம், நிலத்தடி நீர் பாதிப்பு


ADDED : நவ 03, 2025 10:22 PM

Google News

ADDED : நவ 03, 2025 10:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: தேர்வழி கிராமத்தின் நிலத்தடி நீரின் தரம் மற்றும் மக்களின் சுகாதாரம் பாதிக்கும் வகையில், அங்குள்ள தாமரை ஏரி மாசடைந்து, கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது.

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட தாமரை ஏரி, 5.67 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரியை நீர்வளத்துறை யினர் பராமரித்து வருகின்றனர்.

இந்த ஏரி தேர்வழி கிராமத்தின் நிலத்தடி நீராதாரமாக உள்ளது. தாமரை ஏரியில், கோட்டக்கரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கழிவுநீர் திறந்து விடப் படுகிறது.

இதனால், ஏரி நீர் மாசடைந்து, ஆகாய தாமரை வளர்ந்துள்ளது.

தற்போது தாமரை ஏரியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால், தேர்வழி கிராமத்தின் நிலத்தடி நீரின் தரம் குறைந்து வருவதாக, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகமும், தேர்வழி ஊராட்சி நிர்வாகமும், ஏரியில் கழிவுநீர் திறந்து விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தேர்வழி கிராம நிலத்தடி நீரின் தரத்தை பாதுகாக்கும் வகையில், ஏரியை துார் வாரி, ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்த, நீர்வளத்துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us