/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் கழிவுநீர் தேக்கம் மக்களின் சுகாதாரம் பாதிப்பு
/
சாலையில் கழிவுநீர் தேக்கம் மக்களின் சுகாதாரம் பாதிப்பு
சாலையில் கழிவுநீர் தேக்கம் மக்களின் சுகாதாரம் பாதிப்பு
சாலையில் கழிவுநீர் தேக்கம் மக்களின் சுகாதாரம் பாதிப்பு
ADDED : ஏப் 14, 2025 01:15 AM

கும்மிடிப்பூண்டி,:சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் சேகரமாகும் கழிவுநீர், தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயில் திறந்து விடப்படுகிறது.
இந்த கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேற வழி ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக, தாழ்வாக உள்ள பகுதியில் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி, தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதை ஒட்டிய இணைப்பு சாலையிலும் தேங்கி நிற்கிறது.
இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிப்பதுடன், வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. கால்வாயில் சேகரமாகும் கழிவுநீரை வெளியேற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

