/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போக்குவரத்திற்கு இடையூறாக ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தம்
/
போக்குவரத்திற்கு இடையூறாக ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தம்
போக்குவரத்திற்கு இடையூறாக ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தம்
போக்குவரத்திற்கு இடையூறாக ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தம்
ADDED : டிச 26, 2025 06:47 AM

கும்மிடிப்பூண்டி: சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தமிழக எல்லை துவங்கும் இடத்தில் இடையூறாக நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்களால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே தமிழக எல்லை துவங்கும் இடத்தில், ஆரம்பாக்கம் கிராமம் உள்ளது. அந்த இடத்தில் போலீசாரின் சோதனைச்சாவடியும் அமைந்துள்ளது.
அதனருகே, சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து ஷேர் ஆட்டோக்களும், தனியார் வாகனங்களும் வரிசையாக நிறுத்தப்படுகின்றன.
ஆட்டோ ஸ்டாண்ட் போல் தேசிய நெடுஞ்சாலை மாறியதால், தமிழக எல்லை துவங்கும் இடத்தில் போக்குவரத்து கடுமையா க பாதிக்கப்படுகிறது.
அங்குள்ள இணைப்பு சாலையை, சாலையோர கடைகள் ஆக்கிரமித்ததால், தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, ஷேர் ஆட்டோக்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்க, ஆரம்பாக்கம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

