/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடை ஷட்டரை வெட்டி ரூ.80,000 கொள்ளை
/
கடை ஷட்டரை வெட்டி ரூ.80,000 கொள்ளை
ADDED : டிச 22, 2024 01:19 AM

ஆவடி:ஆவடி அடுத்த சேக்காடு, தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சரவணன், 45. இவர், கடந்த ஏழு ஆண்டுகளாக, சேக்காடு, சி.டி.எச்., சாலையில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை, வழக்கம் போல் கடையில் பணிபுரியும் டிரைவர் மோகன்ராஜ் என்பவர் கடையை திறக்க வந்த போது, ஆள் உள்ளே செல்லும் அளவுக்கு, கடையின் ஷட்டர் வெட்டி எடுக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, கல்லாவில் வைத்திருந்த 80,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.
புகாரின்படி, ஆவடி போலீசார், அங்குள்ள 'சிசிடிவி' காட்சியை ஆய்வு செய்த போது, நேற்று நள்ளிரவு 12:05 மணிக்கு, 'மாஸ்க்' அணிந்து வந்த மர்ம நபர், காஸ் கட்டர் வாயிலாக ஷட்டரை வெட்டி, உள்ளே சென்று வருவது தெரிந்தது.
போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.