sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பயணியர் நிழற்குடை அமைக்க சிறுவாபுரி பக்தர்கள் கோரிக்கை

/

பயணியர் நிழற்குடை அமைக்க சிறுவாபுரி பக்தர்கள் கோரிக்கை

பயணியர் நிழற்குடை அமைக்க சிறுவாபுரி பக்தர்கள் கோரிக்கை

பயணியர் நிழற்குடை அமைக்க சிறுவாபுரி பக்தர்கள் கோரிக்கை


ADDED : டிச 21, 2024 10:37 PM

Google News

ADDED : டிச 21, 2024 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த, சின்னம்பேடு கிராமத்தில், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து சிறுவாபுரிக்கு வரும் பக்தர்கள், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுரோடு சந்திப்பில், இடது புறம் பிரியும் சாலையில் மூன்று கிலோமீட்டர் துாரம் பயணிக்க வேண்டும்.

செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில், சிறுவாபுரியில் ஏற்படும் போக்குவரத்து சிக்கலை கருதி, கார் மற்றும் சுற்றுலா வாகனங்கள் புதுரோடு சந்திப்பில் தடுத்து நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து, மினி பேருந்து வாயிலாக சிறுவாபுரி கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர்.

புதுரோடு சந்திப்பில் பேருந்து நிழற்குடை இல்லாததால், மழையிலும், வெயிலிலும், மினி பேருந்துக்காக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிறுவாபுரி பக்தர்களின் நலன் கருதி, புதுரோடு சந்திப்பில் அடிப்படை வசதிகளுடன்கூடிய பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us