sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கற்கள் பெயர்ந்த ஏரிக்கரை சாலை ஆறு கிராமவாசிகள் கடும் அவதி

/

கற்கள் பெயர்ந்த ஏரிக்கரை சாலை ஆறு கிராமவாசிகள் கடும் அவதி

கற்கள் பெயர்ந்த ஏரிக்கரை சாலை ஆறு கிராமவாசிகள் கடும் அவதி

கற்கள் பெயர்ந்த ஏரிக்கரை சாலை ஆறு கிராமவாசிகள் கடும் அவதி


ADDED : மார் 31, 2025 03:16 AM

Google News

ADDED : மார் 31, 2025 03:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீதேவிகுப்பம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வெண்மனம்புதுார் ஏரிக்கரை வழியாக வெண்மனம்புதுார், செஞ்சி பானம்பாக்கம், காரணி, விடையூர் மற்றும் ராமன்கோவில் செல்லும் பகுதிவாசிகள் சென்று வருகின்றனர்.

இந்த ஏரிக்கரை சாலை, ஐந்தாண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. ஆனால், பேருந்து நிறுத்தத்திலிருந்து 200 மீ., துாரமுள்ள சாலை மட்டும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால், இந்த சாலை கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை கடம்பத்துார் ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் வெண்மனம்புதுார் ஏரிக்கரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஆறு கிராம பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us