/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இளைஞர்களுக்கு திறன் வளர் பயிற்சி
/
இளைஞர்களுக்கு திறன் வளர் பயிற்சி
ADDED : பிப் 26, 2026 05:01 AM
திருவள்ளூர்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
திருவள்ளூர் கலெக்டர்பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
'தாட்கோ' மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 - 32. பயிற்சி காலம் 45 நாட்கள்.
மேலும், விமான முன்பதிவு ஆளுமை, கேபின் குழு பணியாளர் பயிற்சி உள்ளிட்டவைகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள். பயிற்சியை முழுமையாக முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் தகுதியுள்ள இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சியை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

