/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சமூக ஆர்வலர் உயிரிழப்பு: கண்கள், உடல் தானம்
/
சமூக ஆர்வலர் உயிரிழப்பு: கண்கள், உடல் தானம்
ADDED : ஜன 01, 2026 05:01 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் விருப்பப்படி, கண்கள் மற்றும் உடல் தானமாக வழங்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டி வி.எம்., தெருவில் வசித்தவர் பி.விஜயசாரதி, 50; சமூக ஆர்வலர். தனியார் தொழிற்சாலையில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.
சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அது தொடர்பான நிகழ்வுகளை மேற்கொண்டு வந்தார். இவருக்கு மனைவி, தலா ஒரு மகள், மகன் உள்ளனர்.
இவர், நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் விருப்பப்படி, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு இரு கண்களும் தானமாக வழங்கப்பட்டன. நேற்று காலை இறுதி சடங்கு முடிந்த பின், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவ கல்லுாரிக்கு அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது.

