/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஞ்சாட்சர மலையில் சோம வார பிரதோஷம்
/
பஞ்சாட்சர மலையில் சோம வார பிரதோஷம்
ADDED : ஜன 27, 2025 11:26 PM
ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை அடுத்த, ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தின் தென்மேற்கில் அமைந்துள்ளது பஞ்சாட்சர மலை. இந்த மலை உச்சியில், 700 ஆண்டுகள் பழமையான மரகதேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.
பிரத்யேக கோவில் இன்றி, மலை உச்சியில் பரந்தவெளியில் மூலவர் அருள்பாலித்து வருகிறார். பக்தர்களே இந்த சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர். பிரதோஷம், சோமவார பூஜை உள்ளிட்டவை இங்கு நடத்தப்பட்டு வருகின்றன.
திங்கட்கிழமையான நேற்று மாலை, மரகதேஸ்வரருக்கு சோமவார சிறப்பு பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது.
அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஸ்ரீகாளிகாபுரம், சோளிங்கர், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.

