/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எண்ணுார் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு
/
எண்ணுார் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு
ADDED : நவ 26, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீஞ்சூர் : தென்கிழக்கு வங்ககடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகமாறி உள்ளது.
இது புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, நேற்று எண்ணுார் துறைமுகத்தில்ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டது.
இது கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கும், துறைமுகங்களுக்கு வந்து செல்லும்கப்பல்களுக்கும் முன் எச்சரிக்கை செய்வதாகும்.