/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
/
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
ADDED : மார் 30, 2025 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி,:திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் வரும் கல்வியாற்கான மாணவர் சேர்க்கை, கடந்த 1ம் தேதி முதல் ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளை சேர்க்கும் பணிகள், திருவள்ளூர் கல்வி மாவட்ட அலுவலர் மோகனா உத்தரவின்படி நடந்து வருகிறது.
பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருத்தணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அரசுப் பள்ளியில், ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருத்தணி வட்டார கல்வி அலுவலர்கள் மேரிஜோஸ்பின், சலபதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட பல்வேறு துறையினர் பங்கேற்றனர்.