sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் அபாயத்தில் மாணவர்கள்

/

 பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் அபாயத்தில் மாணவர்கள்

 பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் அபாயத்தில் மாணவர்கள்

 பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் அபாயத்தில் மாணவர்கள்


ADDED : டிச 19, 2025 06:34 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: அரசு பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவாலங்காடு ஒன்றியம் சின்னமண்டலி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி, ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மையம் என, ஒருங்கிணைந்த வளாகத்தில் அமைந்துள்ளது.

இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 90 மாணவ ---- மாணவியர் பயின்று வருகின்றனர்.

சில மாதங்களாக அருகே உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பள்ளி வளாகத்தில் தேங்கி வருகிறது. பள்ளி கட்டடம், கழிப்பறை இடையே கழிவுநீர் தேங்கி குளம் போல் மாறியுள்ளது.

இதனால், மாணவ --- மாணவியர் இயற்கை உபாதை கழிக்க, கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களை அனுபவிப்பதாக கூறுகின்றனர்.

மேலும், கழிவுநீர் தேங்கியுள்ள பகுதி அருகே சமையல் கூடமும் உள்ளது. இங்கு சமைத்து பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உணவு வழங்கப் படுகிறது.

தேங்கியுள்ள கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், அவ்வப்போது மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும், இனிவரும் காலங்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us