/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூடுதல் பேருந்துகள் இயக்க மாணவர்கள் கோரிக்கை
/
கூடுதல் பேருந்துகள் இயக்க மாணவர்கள் கோரிக்கை
ADDED : ஜன 31, 2024 11:28 PM

கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட போளிவாக்கம் ஊராட்சி.
இங்குள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி போளிவாக்கம், வலசைவெட்டிக்காடு உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி, மாணவ - மாணவியர் மற்றும் அப்பகுதியினர் என, தினமும் 500க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் பள்ளி நேரங்களில் போதுமான பேருந்து சேவை இல்லாததால் மாணவ - மாணவியர் வெகுநேரம் காத்திருப்பதுடன், பள்ளிக்கு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால், மாணவ - மாணவியர் இலவச பஸ் பாஸ் இருந்தும் ஷேர் ஆட்டோவில் பணம் கொடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுஉள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துக்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவ - மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.