sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவாலங்காடில் திடீர் பனி 20 நிமிடம் ரயில்கள் தாமதம்

/

திருவாலங்காடில் திடீர் பனி 20 நிமிடம் ரயில்கள் தாமதம்

திருவாலங்காடில் திடீர் பனி 20 நிமிடம் ரயில்கள் தாமதம்

திருவாலங்காடில் திடீர் பனி 20 நிமிடம் ரயில்கள் தாமதம்


ADDED : மார் 30, 2025 12:33 AM

Google News

ADDED : மார் 30, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில், நேற்று காலை திடீரென அதிகளவில் பனிப்பொழிவு இருந்தது. காலை 8:00 மணி வரை மூடுபனி நிலவியது. இதன் காரணமாக, சென்னை - -அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் போக்குவரத்து பாதித்தது. ரயில்களின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு, தண்டவாளத்தில் மெதுவாக ஊர்ந்து சென்றன.

வழக்கமாக, மார்கழி மற்றும் தை மாதங்களில் பனிப்பொழிவு அதிகளவில் இருக்கும். பின், மாசி மாதத்தில் அவ்வப்போது நிகழும் காலநிலை மாற்றத்தால், பங்குனி மாதமான நேற்று திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது.

இதனால், அரக்கோணம் ---- சென்னை மார்க்கத்தில், காலை புறப்பட வேண்டிய 20க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் மற்றும் காவேரி, திருவனந்தபுரம், மங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஊர்ந்தபடி சென்றன. புறநகர் ரயில்கள், 20 நிமிடங்கள் தாமதமாக சென்றன. இதனால், பயணியர் கடும் அவதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us