sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஈக்காடு ஊராட்சி தலைவர் மீது ஊழல் புகார் வார்டு உறுப்பினர்களிடம் தாசில்தார் விசாரணை

/

ஈக்காடு ஊராட்சி தலைவர் மீது ஊழல் புகார் வார்டு உறுப்பினர்களிடம் தாசில்தார் விசாரணை

ஈக்காடு ஊராட்சி தலைவர் மீது ஊழல் புகார் வார்டு உறுப்பினர்களிடம் தாசில்தார் விசாரணை

ஈக்காடு ஊராட்சி தலைவர் மீது ஊழல் புகார் வார்டு உறுப்பினர்களிடம் தாசில்தார் விசாரணை


ADDED : ஜன 05, 2025 02:06 AM

Google News

ADDED : ஜன 05, 2025 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:ஈக்காடு ஊராட்சி தலைவர் மீது, சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, திருவள்ளூர் தாசில்தார், வார்டு உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினார்.

திருவள்ளூர் அடுத்துள்ளது ஈக்காடு ஊராட்சி. திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்திற்கு உட்பட்ட இந்த ஊராட்சி தலைவராக லாசனா, துணை தலைவராக குணசேகர் உள்ளனர்.

இந்த ஊராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டு உறுப்பினர்களில் ஒருவர் ஊராட்சி தலைவராகவும், ஒருவர் இறந்து விட்டார்.

ஈக்காடு ஊராட்சியில், தலைவர், துணை தலைவர் மற்றும் செயலர் ஆகியோர் கூட்டாக இணைந்து நிதி கையாடல், செய்யாத பணிகளை செய்ததாக, திருட்டு கணக்கு எழுதுதல், மன்ற ஆவணங்களில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் என, தமிழ்செல்வி உள்ளிட்ட 9 வார்டு உறுப்பினர்கள், கலெக்டர், ஊரக வளர்ச்சி திட்ட கூடுதல் தலைமை செயலர் உள்ளிட்டோரிடம் கடந்த ஆண்டு புகார் மனு அளித்தனர்.

இந்த மனு மீது யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, நேற்று முன்தினம் ஆறு கவுன்சிலர்கள், திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அவர்களை, தாசில்தார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து, நேற்று, தாசில்தார் வாசுதேவன், ஈக்காடு ஊராட்சி அலுவலகத்தில், தலைவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, வார்டு உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

பின், தாசில்தார் கூறுகையில், 'விசாரணை விபரம் மற்றும் அறிக்கை, கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பின், குற்றச்சாட்டுகள் குறித்து, கலெக்டர் முடிவு செய்வார்' என்றார்.






      Dinamalar
      Follow us