/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்பேட்டையில் தொழில் துவக்க இடம் வழங்க தமிழக அரசு திட்டம்
/
தொழிற்பேட்டையில் தொழில் துவக்க இடம் வழங்க தமிழக அரசு திட்டம்
தொழிற்பேட்டையில் தொழில் துவக்க இடம் வழங்க தமிழக அரசு திட்டம்
தொழிற்பேட்டையில் தொழில் துவக்க இடம் வழங்க தமிழக அரசு திட்டம்
ADDED : ஏப் 02, 2025 10:19 PM
திருவள்ளூர்:தொழிற்பேட்டைகளில் தொழில் துவங்க வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் இடம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துளளது.
கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டம் ஈங்கூர், திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தொழிற்கூடங்களை குத்தகை மற்றும் வாடகை முறையில் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தில் குறு, சிறு மற்றும் பெரு தொழில் முனைவோரை கருத்தில் கொண்டு, அவர்கள் பயன்பெறும் வகையில் வாடகை மற்றும் குத்தகை முறையில் காலி மனையாகவோ, மறு சீரமைக்கப்பட்ட தொழிற்கூடங்களாகவோ குத்தகை அல்லது வாடகை முறையில் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர், தாங்கள் தொழில் செய்வதற்கு ஏதேனும் முறையில் தொழிற்கூடங்களை பெற விண்ணப்பிக்கும் முன், இந்த தளத்தை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர், வரும் 4ம் தேதி ஈங்கூர் தொழிற்பேட்டையில் பார்வையிடலாம்.
மேலும், முதலிபாளையம் தொழிற்பேட்டைக்கு அழைத்து செல்ல, துறையின் சார்பில் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பங்குபெற விருப்பமுள்ள தொழில் முனைவோர், https://forms.gle/fZPDgyWUToAAUobt7 என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். மேலும் விபரங்களுக்கு, 9150277723 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

