ADDED : ஜன 30, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநின்றவூர் : திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார், உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் குறித்த எந்த விபரமும் தெரியவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.