ADDED : ஜன 24, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வள்ளி மலை:வேலுார் மாவட்டம், பொன்னை அடுத்த வள்ளி மலையில் இன்று தைப்பூசம் திருநாளை ஒட்டி, காலை 7:00 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள ஆறுமுக சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.
மாலை 5:00 மணிக்கு, வள்ளியம்மன் சன்னிதியில் இருந்து பால்குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மலைக்கோவிலில், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.
இரவு 7:00 மணிக்கு, ஊர் கோவிலில் இருந்து உற்சவர் ஆறுமுக சுவாமி வீதியுலா எழுந்தருளுகிறார்.
அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சின்னமலை அடிவாரத்தில், இன்று காலை 8:00 மணிக்கு பக்தோசித பெருமாள் எழுந்தருளுகிறார்.