நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:ஆர்.கே.பேட்டை அடுத்த, ரெங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி, 60; இவர், 15 ஆண்டுகளுக்கு முன் விடையூர் ஜாபர் நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கொத்தனார் பணி செய்து வருகிறார்.
கடந்த 8ம் தேதி கடம்பத்துார் பெருமாள் கோவில் பகுதியில் கமல் என்பவரது வீட்டில் கட்டுமான பணி மேற்கொண்டார்.
அப்போது சிமென்ட் மூட்டையை துாக்கி வரும் போது நிலைதடுமாறி விழுந்தார். படுகாயமடைந்த அவர், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் பலியானார்.
இதுகுறித்து இவரது மகன் பிரகாஷ், 37, என்பவர், அளித்த புகாரையடுத்து, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.